ஊரடங்கு முடியும் வரை விலையில்லா உணவு வழங்கப்படுகிறது!!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை விலையில்லா உணவு வழங்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் நாளை முதல் ஊரடங்கு முடியும் வரை விலையில்லா உணவு வழங்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களில் 3 வேளையும், விலையில்லா உணவு வழங்கப்படவுள்ளது.

Exit mobile version