வட்டியில்லா நகைக்கடன் வழங்குவதாகக் கூறி மோசடி

வட்டி இல்லாமல் கடன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நகைக்கடை மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டோர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்

சென்னை மாம்பலத்தில் உள்ள தனியார் நகைக்கடையில் இஸ்லாமிய மக்களுக்கு வட்டி இல்லாமல் நகை கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான இஸ்லாமிய மக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்திருந்த நிலையில், நகைகளுக்கான தொகை செலுத்திய போதும் கூட அந்த நகைகளை கடையின் உரிமையாளர் திரும்ப ஒப்படைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

Exit mobile version