மொபைல் ஆப் மூலம் 60 லட்சம் வரை நூதன மோசடி: இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே மொபைல் ஆப் மூலம் ரூ.60 லட்சம் வரை நூதன முறையில் மோசடி செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டையை சேர்ந்த சாதிக் அலி என்பவர் ஏர் டிராவல்ஸ் மற்றும் மணி டிரான்ஸ்பர் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரிடம் திருப்பூர் மாவட்டம் பேயம்பாளையத்தை சேர்ந்த பர்கத்அலி என்பவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, நூதன முறையில் ரூ.40 ஆயிரம் மோசடி செய்துள்ளார். இது குறித்து மங்கலம்பேட்டை போலீசாரிடம் புகார் செய்ததன் அடிப்படையில், பர்கத் அலியின் புகைப்படத்தை கொண்டு அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.

Exit mobile version