பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் தரம்டோரா கீம் என்னும் இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. முன்னதாக கடந்த புதன்கிழமை ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நிகழ்த்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி குண்டுகளை அம்மாநில காவல்துறையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version