நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் தொடங்கியது: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

நான்கு மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் இன்று ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒடிசாவை பொறுத்த வரையில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற நான்கு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் மட்டும் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திராவை பொருத்தவரை சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி, பவன்கல்யாண் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 

Exit mobile version