உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக 4 பேர் நாளை பதவியேற்பு

உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்ரமணியன் உள்பட நான்கு பேர் நாளை பதவியேற்க உள்ளனர்.

இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள ராமசுப்ரமணியன், பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள ரவீந்திர பட் மற்றும் கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகியோர் உச்ச நீதிமன்ற புதிய நீதிபதிகளாக நாளை பதவியேற்கின்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த பானுமதி உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள நிலையில், ராமசுப்பிரமணியன் பதவியேற்பதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை உச்சநீதிமன்றத்தில் இரண்டாக உயர்ந்துள்ளது.

Exit mobile version