காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இருதரப்பிலும் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகின்றன. மேலும் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், புல்வாமாவின் லாஸ்ஸிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சிலமணி நேரங்கள் நீடித்தது.

இதில் தீவிரவாதிகள் 4 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Exit mobile version