4 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்

வேதராண்யத்தில் கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு செல்லாமல் இருந்த மீனவர்கள், நான்கு நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதராண்யத்தில் கடந்த நான்கு நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. காற்றின் வேகத்தால் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது காற்றின் வேகம் தணிந்து கடல் சீற்றம் குறைந்து காணப்பட்டதால், இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் 4 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

Exit mobile version