மதுரையில் சிறுமிக்கு 4 ஆண்டுகளாக தொடர் பாலியல் தொந்தரவு : ஒருவர் கைது

மதுரையில் நான்கு ஆண்டுகளாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாக்கிய இரண்டு இளைஞர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். அண்ணாநகர் அவாஞ்சிநாதன் தெருவைச் சேர்ந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் வேலுச்சாமி இருவரும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த சிறுமிக்கு குழந்தைகள் பிறந்துள்ளன. குழந்தை பிறந்த விஷயத்தை வெளியே சொல்லக் கூடாது என இருவரும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மீட்கப்பட்ட சிறுமி அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வேலுச்சாமியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தலைமறைவான விஜயகுமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version