ராமர் கோயில் கட்டும் பணிக்காக அறக்கட்டளை தொடக்கம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகளுக்காக அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட உள்ளதாக மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பேசிய பிரதமர், உச்ச நீதிமன்றத்தின் வழிக்காட்டுதலின் படி இந்த அறக்கட்டளையை தொடங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்குப்பட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “ஸ்ரீ ராம்ஜென்ம பூமி தீர்த் ஷேத்ரா” என பெயரிடப்பட்டுள்ள இந்த அறக்கட்டளை நிர்வாகிகள், அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவிலை கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளதாக கூறினார்.

Exit mobile version