`அரசுடன் இணைந்து உதவி செய்ய தயார்!’ – முன்னாள் அமைச்சர் தங்கமணி

கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பால் அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களை காப்பாற்ற அரசுடன் இணைந்து உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் குமாரபாளையம், பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்க கோரி முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி, ஆட்சியர் மெகராஜை சந்தித்து மனு அளித்தார். அப்போது பரமத்திவேலூர் எம்எல்ஏ சேகர் உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கமணி, அதிமுக சார்பில் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், தேவை ஏற்பட்டால் மாவட்டம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version