கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடா தனது மனைவியுடன் சென்று வாக்கை பதிவு செய்தார்.
நாடு முழுவதும் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்றுவரும் நிலையில், கர்நாடகா மாநிலத்திலும் வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுவென நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தலையொட்டி முன்னாள் பிரதமர் தேவகௌடா தனது வாக்கினை பதிவு செய்தார். தனது மனைவியுடன் பதுவாலாஹிப்பி வாக்குச்சாவடியில் அவர் வாக்களித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
Discussion about this post