அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது முன்னாள் அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு!!

பல்கலைக்கழக ஆன்லைன் உரையில் பேசிய ஒபாமா, கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்கா கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதாக கூறினார். இறப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், நாட்டின் பொருளாதார வீழ்ச்சியும் அதிகரித்து வருவதாகவும் ஒபாமா தெரிவித்தார். இதனைக் கட்டுப்படுத்த டிரம்ப் தவறிவிட்டதாக சாடியுள்ள அவர், இதை திசை திருப்ப முயற்சிப்பதாக குற்றம்சாட்டினர். இந்த காலகட்டத்தில் கறுப்பின மக்கள் கூடுதல் சுமைகளுக்கு ஆளாகி உள்ளதாகவும், இது டிரம்ப் நிர்வாகத்தின், செயல்படாத தன்மையை காட்டுவதாகவும் ஒபாமா விமர்சித்தார்.

Exit mobile version