அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி., கே.சி. பழனிசாமி கைது

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி., கே.சி. பழனிசாமி புகாரின் பேரில் கோவையில் கைது செய்யப்பட்டார்.

அதிமுகவில் தான் இருப்பது போன்றும், கட்சியை பற்றி தொடர்ந்து விமர்சித்து பேசி வந்துள்ளார். மேலும், அதிமுக பெயரில் இணையதளம் நடத்தி வந்துள்ளார். இது குறித்து முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி புகார் அளித்துள்ளார். இதையடுத்து, கோவை லாலிரோட்டில் உள்ள கே.சி. பழனிசாமி வீட்டில் விசாரணை நடத்திய காவல்துறையினர், அவரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, சூலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version