ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை, முன்னாள் அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளுக்கு போதுமான ஆக்சிஜன் வசதிகளை ஏற்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்களை முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான தங்கமணி வழங்கினார். எலந்தகுட்டை, பள்ளிபாளையம், குமாரபாளையம், கொக்கராயன்பேட்டை ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு, அதிமுக சார்பில் தனது சொந்த நிதியில் இருந்து 21 லட்ச ரூபாய் மதிப்பிலான 24 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் மற்றும் முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்டவற்றை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிம் பேசிய அவர், நாமக்கல்லில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும், தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version