முன்கள பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவிய எம்எல்ஏ தங்கமணி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முன்கள பணியாளர்களுக்கு முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ-வுமான தங்கமணி தனது சொந்த நிதியில் இருந்து அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

பள்ளிபாளையம் நகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றி வரும் செவிலியர்கள், சுகாதாரத்துறையினர், நகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என 350 முன்களப்பணியாளர்களுக்கு, குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி அரிசி மற்றும்
உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். தொடர்ந்து கொரோனா தடுப்பு பணியில் பாதுகாப்புடன்
பணியாற்றும்படி அவர் கேட்டுக் கொண்டார். பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 3

Exit mobile version