முன்னாள் அமைச்சர் காமராஜ் தமிழக அரசுக்கு கோரிக்கை

மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க போவதை, முன்கூட்டியே தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட முன்கள
பணியாளர்களுக்கு மளிகை, அரிசி, காய்கறிகள் உள்ளிட்டவை அடங்கிய நிவாரண
தொகுப்பு, அதிமுக சார்பில் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் உணவுத்துறை அமைச்சருமான காமராஜ், முன்கள பணியாளர்களுக்கு நிவாரண தொகுப்புகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கி விடும் என வானிலை மையம் அறிவித்ததை சுட்டிக்காட்டி, ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என கூறினார். அவ்வாறு அறிவித்தால் மட்டுமே விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட ஏதுவாக இருக்கும் எனவும், அவர் தெரிவித்தார்.

Exit mobile version