முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தனது இன்னுயிரை தந்து தமிழ்மொழியினைக் காத்த மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுக சார்பாக இன்று ஜனவரி 25 தமிழகம் முழுவதும் வீரவணக்க நாள் விழா அணுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வீரவணக்கநாள் விழாவில் பங்கெடுத்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தியாகிகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். முக்கியமாக பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த மொழிப்போர்த் தியாகிகளான தாளமுத்து, நடராஜன், சிவசாமி போன்றவர்களுக்கு மலர்தூவி தனது அஞ்சலியைச் செலுத்தினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.YouTube video player

Exit mobile version