முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் நெல்லையில், முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவருடைய கணவர் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகியோர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து காவல்துறையினர் உடனடியாக விசாரணையை தொடங்கினர். சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு காவல்துறையினர் விசாரணை தீவிரப்படுத்தி வரும் நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கின் முக்கியத்துவத்தை கருதி, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை இயக்குநர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version