உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எம்.பியாக நியமனம்

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை, நியமன மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். 2001 ஆண்டு ஹவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக தனது பயணத்தை தொடங்கிய ரஞ்சன் கோகாய், உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக 2018 ஆம் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version