ஓசூரில் சுற்றி வரும் 2 காட்டு யானைகளை பிடிக்கும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 2 காட்டு யானைகளை பிடிக்கும் பணி இன்றும் நடைபெறுகிறது. ஓசூர் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக சுற்றி வரும் கொம்பன், மார்க் என்ற காட்டு யானைகளை பிடிக்கும் பணி நேற்று மழை காரணமாக கைவிடப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் இன்று காட்டு யானைகளை பிடிக்கும் பணி தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். காட்டு யானைகளை பிடிப்பதற்காக 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

Exit mobile version