காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அமெரிக்க தீயணைப்பு துறையினர் – பலி எண்ணிக்கை 56ஆக உயர்வு

கலிபோர்னியாவில் பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கோடைக்காலம் நிலவி வருவதால், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த காட்டுத்தீ அம்மாகாணத்தின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளையும், குடியிருப்புகளையும் சூழ்ந்தது. இந்நிலையில் காட்டு தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 130க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், காட்டுத்தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர்.

 

 

Exit mobile version