வனத்துறை பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்-அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

வனத்துறை பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும், தமிழக வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு புதிதாக நடப்பட்ட மரக்கன்றுகள் குறித்தும் நடுவதற்கு தயாராக உள்ள யூகலிப்டஸ் மற்றும் முந்திரி மரக்கன்றுகளை பார்வையிட்டு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், வெளி நாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் உள்ள எந்த வனப்பகுதிகளிலும் தீ விபத்து ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். வனத்துறை பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version