சோழிங்கநல்லூரில் ஃபோர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் இன்று திறப்பு

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஃபோர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கவுள்ளார்.

மோட்டார் வாகன உற்பத்தியில் புதிய தொழில் நுட்பத்தின் மூலம் வர்த்தகத்தை பெருக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் என்று முதலீட்டாளர்கள் மாநாட்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதற்காக சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் 28 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஃபோர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் அமைச்சர்கள் மற்றும் ஃபோர்டு நிறுவன அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

Exit mobile version