ராமேஸ்வரத்தில் 8 வது நாளாக வீசி வரும் சூறாவளிக் காற்று

தனுஷ்கோடி, ராமேஸ்வரம், அரிச்சல்முனை மற்றும் மண்டபம் உள்ளிட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து 8 நாட்களாக சூறாவளி மற்றும் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதனால் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மீனவர்கள் தொடர்ந்து, எட்டு நாட்களாக கடலுக்கு செல்லாததால், இறால், மீன், நண்டு உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 24 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exit mobile version