வேலைக்காக விற்கப்பட்ட சிறுமிகளையும் காவல்துறையினர் மீட்டனர்

கோவையில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலைக்காக விற்கப்பட்ட சிறுமிகளையும் காவல்துறையினர் மீட்டனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள, வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. குடும்ப வறுமைக் காரணமாக மூதாட்டி விஜயலட்சுமி, இரண்டு பேத்திகளையும் 20 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக பின்னலாடை நிறுவனத்திற்கு விற்றுள்ளார். இது குறித்து வெள்ளக்குளம் கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில், குடவாசல் காவல்துறையினர் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தின் கீழ், மூதாட்டி விஜயலட்சுமி மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட நீடாமங்கலத்தை சேர்ந்த சகுந்தலா, கனகம் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கோவை புளியம்பட்டியில் உள்ள பின்னலாடை நிறுவனத்திற்கு விற்கப்பட்ட இரண்டு சிறுமிகளையும் காவல்துறையினர் மீட்டனர்.

Exit mobile version