தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம்-அமைச்சர் கே.சி.வீரமணி

தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பு மிகுந்த மாநிலமாக உள்ளதாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.  

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். குப்பை அள்ளும் பணிக்காக 23 லட்ச ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட, பேட்டரியில் இயங்கும், நவீன மூன்று சக்கர வாகனங்களை, ஜோலார்பேட்டை நகராட்சிக்கு அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார். அதுபோல், 29 பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான மானியத் தொகையையும் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார். அதன்பிறகு பேசிய அமைச்சர், தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பு நிறைந்த மாநிலமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

Exit mobile version