தீவிரவாதி காஜாமொய்தீனுக்கு உதவிய அபுபக்கர் என்பவர் கைது

தீவிரவாதி காஜாமொய்தீனுக்கு, தொழில்நுட்ப ரீதியாக உதவிய அபுபக்கர் என்பவரை கேரள காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலையில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதியான காஜா மொய்தீனை, டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது அவருக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவி செய்து, பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்த அபுபக்கர் என்பவரை கேரள காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஜாமொய்தீன் தொடர்பான வழக்கில், தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version