நரிக்குறவர் இனமக்கள் மழை வேண்டி ஆடு, மாடுகளை பலியிட்டு விநோத பூஜை

விழுப்புரத்தில் மழை வேண்டி ஆடு, மாடுகளை பலியிட்டு நரிக்குறவர்கள் விநோத வழிபாடு செய்தனர்.

தமிழகத்தில் பருவ மழை பொய்த்துப்போனதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பல்வேறு தரப்பினரும் மழை வேண்டி பிரர்த்தனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், ஜானகிபுரம், விக்கிரவாண்டி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நரிக்குறவர்கள் ஒன்றிணைந்து மாம்பழப்பட்டு கிராமத்தில் மாடுகளை வெட்டி விநோத பூஜைகள் செய்தனர். மழை பெய்ய வேண்டியும் , காடுகள் செழிக்கவும் இங்குள்ள மக்கள் ஆடு, மாடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Exit mobile version