வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 10 லட்சம் கடைகள் அடைப்பு

வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 10 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆண்டுதோறும் மே 5ம் தேதி வணிகர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, மே 5ம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் 10 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதையொட்டி வணிகர் தின மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து வணிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Exit mobile version