உள்ளாட்சித் தேர்தலுக்கு தடைக் கோரிய வழக்கு இன்று தீர்ப்பு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர்27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரி திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று காலை தீர்ப்பு வழங்குகின்றனர்.

Exit mobile version