மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

குளிர் சீசனையொட்டி ரம்மியமாக காட்சி அளிக்கும் மூணாறுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

கேரள மாநிலம் மூணாறு இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக திகழ்கிறது. மலைகள், குன்றுகள் சூழ்ந்து கண்களுக்கு இதமாக  காட்சியளிக்கும் மூணாறில் தற்போது குளிர்கால சீசனாக உள்ளது. இதனால், இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை  அதிகரித்துள்ளது. இதனிடையே தேனி செல்லும் வழியில் அமைந்துள்ள பூப்பாறை காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது. இவ்வழியே செல்லும் சுற்றுலா பயணிகள் இதன் அழகை ரசிக்கும் வகையில், தோட்டத்தின் நடுவே குடும்பத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.

Exit mobile version