ஜல்லிக்கட்டு காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு துவக்கம்

தை மாதம் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில்  காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கியுள்ளது.  

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிலுள்ள அவனியாபுரம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன ஊராகும். இன்னும் சில தினங்களில் தை மாதம் வர இருப்பதால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில், அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட காளைகளை அதன் உரிமையாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்து  வந்து பதிவு செய்து கொண்டனர். தமிழ்நாடு கால்நடை துறை சார்பாக இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுகிறது. இதன்மூலம் ஜல்லிக்கட்டு மாடுகள் குறித்த மொத்த விவரங்கள் மற்றும் எந்தெந்த வகை இனங்கள் உள்ளன என்று கணக்கெடுக்கப்படுகிறது.

Exit mobile version