இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, இரு தொகுதிகளுக்கும் வேட்பு மனுத்தாக்கல் கடந்த 23ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 3ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அக்டோபர் 21ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24ம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.

Exit mobile version