மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி

விருதுநகரில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் சிவஞானம் துவங்கி வைத்தார்.இன்று தொடங்கி, இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த போட்டியில், 21 வயதுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். முதல் நாளான இன்று தடகளம், நீச்சல் மற்றும் பளுதூக்குதல், கைபந்து போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் முதல் மூன்று இடங்கள் பெறும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

Exit mobile version