70 ஆண்டுகாலமாக காங்கிரஸ் கட்சி எதுவுமே செய்யவில்லை : மோடி

தவறான கொள்கைகளால் காங்கிரஸ் கட்சி நாட்டை நாசப்படுத்தி விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

அரியானா மாநில சட்டசபைக்கு வரும் 21ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது. சிர்சா மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது, காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்காமல் போனது உள்ளிட்ட தவறான கொள்கைகளால் காங்கிரஸ் கட்சி நாட்டை நாசப்படுத்தி விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவின்படி முன்பு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து தற்காலிகமான ஒரு ஏற்பாடுதான் என்றும், ஆனால், இந்த தற்காலிக சலுகை தொடர்பாக கடந்த 70 ஆண்டுகாலமாக காங்கிரஸ் கட்சி எதுவுமே செய்யவில்லை என பிரதமர் விமர்சித்தார்.

Exit mobile version