விழுப்புரத்தில் ரூ. 30 ஆயிரத்துக்கு பெண் குழந்தை விற்பனை – தாய் கைது

விழுப்புரத்தில் பெண் குழந்தையை 30 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு விற்க முயன்ற தாய் மற்றும் வாங்க வந்த தம்பதியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விழுப்புரம் நேரு வீதியில் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த, இந்திராணி என்ற பெண்ணிடம் ஒரு தம்பதி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை கண்ட போலீசார் அவர்களை விசாரித்த போது, கடந்த 31-ம் தேதி இந்திராணிக்கு பெண் குழந்தை பிறந்ததும், அதனை சகாதேவன், ஜோதிக்கு விற்பனை செய்ய இந்திராணி ஒப்புக் கொண்டதும் தெரியவந்தது.

30 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், 10 ஆயிரம் ரூபாய் முன்பணமும் வாங்கியுள்ளார் இந்திராணி. மீதி பணத்தை கொடுத்து குழந்தையை வாங்கிக் கொள்வதாக கூறிய தம்பதி, பணம் கொடுக்காமல் ஏமாற்றி, குழந்தையை கேட்டு தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version