1000 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி சீர்வரிசை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி சீர்வரிசை வழங்கப்பட்டது.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசை வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற விருந்தில் தக்காளி சாதம், புளி சாதம், தயிர் சாதம் என ஐந்து வகையான சாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில்அதிமுக நிர்வாகிகள், கர்ப்பிணிகளின் உறவினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Exit mobile version