கோடையில் களைகட்டும் கால்பந்தாட்ட பயிற்சி வகுப்புகள்

கால்பந்தாட்டத்தில் விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கோடை காலத்தையொட்டி விழுப்புரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பயிற்சி முகாம்களில் ஏராளமான இளைஞர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் கால்பந்தாட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோடையையொட்டி விழுப்புரம் தண்டபாணியார் கால்பந்தாட்ட அகாடமி சார்பில் சிறந்த வீரர்களை உருவாக்கும் நோக்கில் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 8 முதல் 18 வயதுடைய மாணவர்கள் இந்த பயிற்சியை பெற்று வருகின்றனர்.

காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டின் மூலம் உடல் நல்ல ஆரோக்கியமாக இருப்பதாகவும், தெளிவான மனநிலை ஏற்படுவதால் படிப்பில் அதிக ஆர்வம் காட்ட முடிவதாகவும் மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version