தந்தை இறந்ததை அறிந்தும் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவி.. மனதை உருக்கும் சம்பவம்….!

கடலூரில் தந்தை இறந்தது தெரிந்தும் ப்ளஸ் 2 மாணவி தேர்வு எழுத வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த  பொம்மை வியாபாரி ஞானவேல் என்பவரின் மகள் கிரிஜா. இவர் ப்ளஸ் 2 படித்து வருகிறார். இது பொதுத்தேர்வு காலகட்டம் என்பதால் பரீட்சைக்கு தயாராகி வந்துள்ளார். இந்த நிலையில் அவரது தந்தை ஞானவேல் நெஞ்சுவலி காரணமாக மரணம் எய்திய நிலையில், அதனை அறிந்தும் படிப்புதான் முக்கியம் என்று ப்ளஸ் 2 தேர்வினை தான் படித்து வந்த திருப்பாதிரிப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எழுதினார். அவரது சூழலை அறிந்த ஆசிரியர்களும் சக மாணவிகளும் அவருக்கு உறுதுணையாக இருந்து தேர்வினை எழுத உதவினர். இந்த சம்பவம் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Exit mobile version