ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வரும், இன்பம் உணவகம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வரும்,  இன்பம் உணவகம் குறித்த செய்தி நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் வெளியானது.

இதன் எதிரொலியாக இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான மக்கள் இன்பம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் தனியார் அறக்கட்டளைக்கு நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். இதனால் ஆதரவற்றோர், பிள்ளைகளால் கைவிடப்பட்டோர், முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான உணவு, உடைகள் வழங்க முடிவதாக தனியார் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. எனவே இதுகுறித்த செய்தி வெளியிட்ட நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சியை பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version