உணவு தயாரிக்கும் கூடத்தில் இன்று பூமி பூஜை விழா

சென்னையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான உணவு தயாரிக்கும் கூடத்தின் பூமிபூஜை விழா இன்று நடைபெறுகிறது.

சென்னையில், அக்சய பாத்ரா என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம், அரசுப் பள்ளிகளில் உள்ள ஐந்தாயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு மாணவர்களுக்கு அறிவித்துள்ள காலை உணவு திட்டத்திற்காக, பசுமை வழிச்சாலையில், புதிய உணவு தயாரிக்கும் கூடத்திற்கான பூமிபூஜை இன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த உணவுக்கூடம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, 12 ஆயிரம் மாணவர்களுக்கு ஒரே இடத்தில் உணவு தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version