மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று தொடக்கம்

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

2020-2021 நிதியாண்டு நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கான ஆயத்தப் பணியில் மத்திய நிதி அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. பொருளாதார மந்தநிலை, ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் நீடிக்கும் நிலையில், அடுத்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தயார் செய்வது தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டுள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் தங்கள் தரப்பு கருத்துக்களை எடுத்துரைக்கின்றனர்.

Exit mobile version