குளித்தலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்

கரூர் மாவட்டம் குளித்தலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட சுமார் 3 லட்சம் ரூபாய் பணம் சிக்கியது.

குளித்தலை அருகே மருதூர் சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கும்பகோணத்திலிருந்து காரைக்குடிக்கு பால் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி சுமார் 3 லட்சத்து 28 ஆயிரத்து 566 ரூபாய் எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் குளித்தலை சார்நிலை கருவூலத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version