கொடைக்கானலில் பூத்து குலுங்கும் நீல நிற குறிஞ்சி பூக்கள்

கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் நீலநிற குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

பிரையண்ட் பூங்காவில் பல்வேறு வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இருப்பினும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் நீல குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்து குலுங்குகின்றன. ஏற்கனவே கடந்த ஆண்டு குறிஞ்சி மலர் சீசன் முடிந்த நிலையில், வரும் 2030 ஆம் ஆண்டு தான் குறிஞ்சி பூக்கள் பூக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்த மலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

Exit mobile version