பூக்கள் சாகுபடியில் அசத்தும் கிராம மக்கள்

கடலூர் மாவட்டம் பூமணவெளி விவசாயிகள் பூக்கள் சாகுபடியில் அசத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அமைந்துள்ளது பூமணவெளி கிராமம். இந்த கிராமத்தில் அதிகம் பேர் பல்வேறு பூக்களை முக்கிய பயிராக பயிர் செய்து வருகிறார்கள். மல்லி, குண்டுமல்லி, செண்டுமல்லி,கனகாம்பரம் உள்ளிட்ட பல வகையான பூக்களை அவர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். ஐம்பது ஏக்கருக்கு மேல் பூச்செடிகள் பயிரிட்டுள்ளன. மற்ற பயிர்களைப்போல் அல்லாமல் ஒரு வருடத்திலிருந்து பூக்கள் பறித்து விற்பனைக்கு அனுப்பப்படுவதால் நல்ல வருமானமும் கிடைக்கிறது. இதனால் அதிகம் பேர் மலர் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Exit mobile version