அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து இருப்பதில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நெல்லை மாவட்டம் குற்றல அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவியில் குளிக்க நான்காவது நாளாக தடை நீடிக்கிறது. அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.

Exit mobile version