வீராணமங்களம், தாமிரபரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், வீராணமங்களம், தாமிரபரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

டவ்-தே புயல் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இதனால் வீராணமங்களம், தாமிரபரணி போன்ற ஆறுகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version