திண்டுக்கல் மருதாநதியில் வெள்ளப்பெருக்கு : விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் மருதா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள மட்டமலை, ஒவ்வாமலை ஆகிய பகுதிகளில் 2 நாட்களாகப் பெய்த கனமழையால் மலைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நொச்சி ஓடை, பெரியோடையில் அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அய்யம்பாளையம் மருதா நதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்வதால் ஆற்றங்கரையோரப் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version