தொடர் மழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கோதாவரி நதி பாயும் பகுதிகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், கோதாவரி, தேவிபட்டினம், கொத்துரு, வீரவரம், பூடிபள்ளி ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version